வடசென்னைக்கு ரூ.4,181 கோடி பட்ஜெட்.! 219 திட்டங்கள்.! சேகர்பாபு கொடுத்த அப்டேட்.!

Published by
மணிகண்டன்

சென்னை: வடசென்னை பகுதிக்கு மட்டும் 4,181 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழக அரசு வடசென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்தும் அதற்கு அரசு ஒதுக்கிய நிதி குறித்தும் பல்வேறு தகவல்களை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். அவர் கூறுகையில், வடசென்னை பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அனைத்து துறைகளையும் அரசு ஒன்றிணைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .

வடசென்னை பகுதி மேம்பாட்டு நிதியாக மட்டும் சுமார் 4,181 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது என்றும், இதனை கொண்டு வடசென்னை பகுதியில் மட்டும் சுமார் 219 திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு அவற்றை செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகளையும் ஒன்றிணைத்து அத்தனையும் 2025க்குள் முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

வீடில்லாமல் குடிசையில் வாழும் மக்களுக்காக, மாற்று நிரந்தர குடியிருப்புகள் அமைக்க தற்போது அரசுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத நிலங்களை பார்வையிட்டு வருகிறோம் என்றும், வடசென்னை பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றும், அதனால் இங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று அப்பகுதி மேல்நிலை பள்ளியை மேம்படுத்த உள்ளோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டு கொடுத்த பழைய குடியிருப்புகள் எங்கெல்லம் இடிந்து உள்ளதோ,  அதனை சீர் செய்தோ அல்லது புதிய இடத்தில் குடியிருப்புகள் கட்டித்தரவோ நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்றும் இதற்காக அந்த துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களிடம் இந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

1 hour ago

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…

2 hours ago

”த.வெ.க இன்னொரு பா.ஜ.க.. அங்க எல்லாமே ஏமாற்றம் தான்..” தவெக TO திமுக வைஷ்ணவி பளிச்.!

கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…

2 hours ago

”சல்மான் கான் என்னை அழைத்தார், அவரை 6 மாதங்களாக தெரியும்” வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண் கைது.!

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…

3 hours ago

LSG vs GT: குஜராத்தை சமாளிக்குமா லக்னோ அணி.? டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் விவரம்.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

3 hours ago

நாளை வெளியாகவிருந்த சண்முக பாண்டியனின் ‘படைத்தலைவன்’ திடீரென ஒத்திவைப்பு.! காரணம் என்ன.?

சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…

5 hours ago