#BREAKING: மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து..!

A part of the bridge under construction on Puthunatham Road in Madurai collapsed and caused an accident.

மதுரையில் புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

மதுரையில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. மதுரையில் புதுநத்தம் சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.  மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்று மீட்புக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மீட்புப்பணியில் போலீசார்மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மேம்பாலம் பணியானது மத்திய ,மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்துதான் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது.