தமிழகம்,கர்நாடகம் மற்றும் கேரளாவில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

Default Image

தமிழகம்,கர்நாடகம் மற்றும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தெலங்கானா, ஒடிசா, மத்திய பிரதேசம்  மற்றும்  சத்திஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில்  வட மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக  கன மழை தொடரும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .கர்நாடகாவில்  உள்ள கடலோர பகுதிகளில்  அடுத்த 3 நாட்களுளுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே கேரளா மற்றும்  கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது .இதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 3  நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai