ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை ,மழை, வெள்ளத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇது குறித்து தெரிவித்த அவர் மழைக்கால கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது அனைத்து துறைகளையும் தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.
unknown nodeரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை.வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே முதலமைச்சர் 4 ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.இந்நிலையில் அரசு தூங்குவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பதில் தெரிவித்துள்ளார்.
unknown nodeமேலும் மழை, வெள்ளத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் உதயகுமார் கோரிக்கை விடுத்தார். மாநில கட்டுப்பாட்டு மையம் 1070 மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் 1077 என்ற அவசர தொலைபேசி எண்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவித்தார்.
DINASUVADU