அண்ணாமலை வேட்புமனு செல்லாது என அறிவிக்க கோரிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

Annamalai : தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற  முத்திரை தாளில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, பல்வேறு வேட்புமனுக்களை ஏற்கப்பட்ட நிலையில், சில மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் ஒருசில வேட்புமனுக்கள் நிறுத்தியும் வைக்கப்பட்டது.

இந்த சூழலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இன்று அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. இந்த நிலையில், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற  முத்திரை தாளில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, Indian Non Judicial பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, நீதிமன்ற பயன்பாட்டிற்கான ‘India Court Fee’ பத்திரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்

இதனால் நீதிமன்ற முத்திரைத்தாளை அண்ணாமலை பயன்படுத்தி உள்ளதால் அவரது வேட்புமனுவை செல்லாது என அறிவிக்க அதிமுக, நாம் தமிழர், திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேட்புமனு பரிசீலினையின்போதே அண்ணாமலையின் மனுவும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, நாதக உட்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஆட்சேபம் தெரிவித்தபோதும் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டது.

கோவை தேர்தல் அதிகாரியான ஆட்சியர், அடிப்படை அம்சங்களை பரிசீலிக்காமல் அவசரமாக அண்ணாமலை மனுவை ஏற்றுள்ளார் எனவும் கூறியுள்ளனர். மேலும், அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் கோவை அதிமுகவினர் தெரிவித்துள்ளனர் .

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

24 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

34 minutes ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

1 hour ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

2 hours ago