நடிகர் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
unknown nodeநடிகர் விஜய்- நடிகை கீர்த்திசுரேஷ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.இந்த படத்தை சன்பீக்சர்ஸ் தயாரிக்கின்றது . இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது .நடிகர் விஜயின் மாஸ் அரசியல் ஸ்பிச் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடந்தது.இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும்,அரசியல்வாதிகள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.
unknown nodeஇந்த படம் தீபாவளிக்கு ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில்’சர்கார்’ படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.இந்த வழக்கு மீதான விசாரணையை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சர்கார்’ படத்துக்கு தடை கோரி அவசர வழக்கு தொடர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் இவர் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டதை அடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.இந்த வழக்கானது தனது கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.படத்தின் மீதான இந்த திடீர் வழக்கு குறித்து தெளிவான தகவல் மற்றும் வழக்கு தொடர்பான தகவல்கள் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஜயின் எல்லா படங்களும் இதுபோன்ற சட்டவழக்குகளை சந்தித்து சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.