மிக்ஜாம் புயல்.! திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.!

வங்கக்கடலில் உருவான மிகஜாம் புயலானது (Michaung Cyclone) தற்போது கரையை கடந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் இருக்கும் இந்த புயலானது

Michaung Cyclone - Thiruvannamalai School leave

வங்கக்கடலில் உருவான மிகஜாம் புயலானது (Michaung Cyclone) தற்போது கரையை கடந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் இருக்கும் இந்த புயலானது 14கிமீ வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது . இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகனமழை பெய்து வருகிறது.

நேற்றும் இன்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் அதீத கனமழை காரணமாக நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கபட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே அந்த மாவட்டங்களில் கல்வி நிலையங்களான பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமல்லாமல் அரசு, தனியார் அலுவலகங்கள், ரேஷன் கடைகள் உள்ளிட்டவைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல்.! 23 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தற்போது கனமழை காரணமாக திருவண்ணாமலை வட்டம் செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் நாளை காலை கரையை கடக்க உள்ளது. தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.