மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் செந்தில் பாலாஜி

Minister Senthil Balaji has warned that stern action will be taken if liquor is sold at extra cost.

மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை.

தமிழகத்தில் மதுபான கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்குள் மதுபானங்கள் விலைப்பட்டியல் வேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட கூடாது எனவும் கூறியுள்ளார்.

மேலும், சென்னை கொருக்குப்பேட்டையில் மருத்துவமனை, பள்ளி அருகே டாஸ்மாக் கடை உள்ளது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.