விபத்துக்குள்ளானது துணைமுதல்வர் பன்னீர் செல்வத்தின் பிரச்சார வாகனம்

The accident was the propaganda vehicle of Vice Chief Minister Panneerselvam

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின்  பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

unknown node

இந்த வகையில் அதிமுக சார்பாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.அதில் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக முதலமைச்சர்,துணைமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நீலகிரி தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.இதனால் ஊட்டியில் இருந்து கூடலூருக்கு பன்னீர்செல்வத்தின் பிரச்சார வாகனம் சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ஆனால் அதேபோல் விபத்து நேர்ந்த போது பிரச்சார வாகனத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இல்லை.இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.