அதிமுக-தேமுதிக கூட்டணி இறுதியானது!!5+1 இடங்களில் போட்டியிடும் தேமுதிக !!வெளியான தகவல்

The AIADMK-DMdk alliance is final! athimuka themuthika kootani

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.

மக்களவை தேர்தலுக்கு அதிமுக-தேமுதிக கூட்டணி விஜயகாந்த் தலைமையிலான கூட்டத்தில் உறுதியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

கடலூர் ,கள்ளக்குறிச்சி,தருமபுரி, ஆரணி, சிதம்பரம்,கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை  அ.தி.மு.கவிடம் பாமக கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

unknown node

அதேபோல்  கடலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகியவற்றை தேமுதிகவும் கேட்பதாலேயே தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி  நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்  மக்களவை தேர்தலுக்கு அதிமுக-தேமுதிக கூட்டணி விஜயகாந்த் தலைமையிலான கூட்டத்தில் உறுதியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களவை தேர்தலில் 5 சீட்டும்,மாநிலங்களவையில் ஒரு சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரவும், தேமுதிகவுக்கு 20% இடங்களை ஒதுக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.