தமிழகத்தை பொறுத்த வரை இன்னும் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க வில்லை -என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின்படி மாநில அரசை மத்திய அரசு இயக்குகிறது .ஆணவக்கொலை நடைபெறுவதற்கு காரணம் மக்களை அடக்கி வைத்துள்ள திமுக, விசிகதான்.தமிழகத்தை பொறுத்த வரை இன்னும் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க வில்லை. வரும் தேர்தலில் பாஜக அமைக்கும் கூட்டணி மிக பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.