மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு தான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். இடைக்கால பட்ஜெட்டில், சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ6 ஆயிரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது . அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது.மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு தான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.