நெருங்கும் புயல்.! விபத்துக்கள் – அபாயம்.! பொதுமக்களுக்கு அரசின் கடும் கட்டுப்பாடுகள்...

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் வடதமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் காரணத்தால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்

Michaung Cyclone - Govt release Precautions

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் வடதமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் காரணத்தால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனவும், நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டு 2 நாள் நிர்வாக காரணங்களுக்காக “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், பால், உணவு, மருத்துவம் தவிர இதர அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை என தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை.! நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.!

அதீத கனமழை எச்சரிக்கை குறித்து தமிழநாடு அரசு பேரிடர் மீட்புத்துறை பொதுமக்களுக்கு புயல் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.  மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இன்று (03-12-2023) முதல் பொதுமக்கள் பின்வரும் எச்சரிக்கையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.

கயிறு, மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), அவசர விளக்கு (emergency light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

பலத்த காற்று காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகடுகளாலான மேற்கூரைகள் பறந்து விழுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம்.

கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.

ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் தன்படம் (செல்ஃபி) எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கன மழை பெய்யும். இதனால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்…

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் -1070

வாட்ஸ் அப் எண். 9445869848.

மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் 1077