பியூஷ் கோயலுடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்.06) சென்னையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்த விழாவின் மேடையில் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்றும் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று.ஆனால் அதில் இறுதி முடிவு எடுக்காமல் உள்ளது.
unknown nodeஅதேவேளையில் தனியார் ஹோட்டலில் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சுதீஷுடன் தேமுதிக தொகுதி பங்கீட்டு குழுவும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தனர். முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்டோர் துரைமுருகன் வீட்டுக்கு சென்று சந்தித்தனர்.
இதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,எங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க நிர்வாகிகள் வந்தனர்.எங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்று தெரிவித்தேன்.அதிமுக உடனான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு உள்ளது.
தேமுதிக கூட்டணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலனை செய்யப்படும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.