பொலிரோ கார் மீது மினி லாரி மோதியதில், கவரிங் நகைக்கடை உரிமையாளர் உட்பட, மூன்று பேர் பலி.!

கோவை, ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த 48 வயதான பாலசுப்ரமணியன் ராஜவீதியில் உள்ள அட்சயா கோல்டு கவரிங் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர், இரு தினங்களுக்கு முன்பு

கோவை, ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் தனது நகைக்கடைக்கு  கவரிங் வாங்க அவருடன் சேர்ந்து இரண்டு பேர் சென்னைக்கு சென்றுள்ளார்.

ஆத்துார் புறவழிச்சாலையில், கார் மீது மினி லாரி மோதியதில், கவரிங் நகைக்கடை உரிமையாளர் உட்பட, மூன்று பேர் உயிரிழந்தனர்.

கோவை, ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த 48 வயதான பாலசுப்ரமணியன் ராஜவீதியில் உள்ள அட்சயா கோல்டு கவரிங் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர், இரு தினங்களுக்கு முன்பு இரவு அவரது பொலிரோ காரில் சென்னைக்கு கவரிங் வாங்க சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து 10 கிலோ கவரிங் நகையை வாங்கி அவரது பொலிரோ காரில், கோவைக்கு திரும்பி வந்துள்ளார். அவருடன், நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த மேலாளர் 41 வயதான வரதராஜ், மற்றும் கோவை, மதுக்கரையைச் சேர்ந்த 36 வயதுடைய ஓட்டுனர் ரமேஷ் ஆகியோர் பாலசுப்ரமணியனுடன் சென்றனர்.

unknown node

இந்நிலையில், நள்ளிரவு ஆத்துார் புறவழிச்சாலையில் வந்தபோது, சேலத்திலிருந்து, சென்னை நோக்கிச்சென்ற எஸ்.டி கூரியர் மினி லாரி, கார் மீது மோதியது. அதில், இரு வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது விழுந்தது. இந்த விபத்தில், மூன்று பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மூவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மோதிய மினி லாரி ஓட்டுனரான திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த 22 வயதான வரதராஜ் என்பவரை ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிரோ கார் மீது மினி லாரி மோதியதில், கவரிங் நகைக்கடை உரிமையாளர் உட்பட, மூன்று பேர் பலி.!