இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக ஆட்சி.!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு ஆட்சி நிறைவுபெற்று, இன்று முதல் 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு ஆட்சி நிறைவுபெற்று, இன்று முதல் 5-ம் ஆண்டு தொடங்கிய நிலையில், அரசின் சாதனைகளை முதலமைச்சர் பழனிசாமி நேற்று பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நம்‌ இதயத்தில்‌ என்றும்‌ வாழும்‌ பாசமிகு தாய்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ தொடர்‌ வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பொன்னான நாளின்‌, நான்காம்‌ ஆண்டு நிறைவுற்று இன்று ஐந்தாம்‌ ஆண்டு தொடங்குகிறது.

கழக நிறுவனத்‌ தலைவர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌ நிகழ்த்திய சாதனையைப்‌ போல, தொடர்ந்து ஆட்சியில்‌ நீடிக்கும்‌ அரசாக, 2016-ஆம்‌ ஆண்டு நடைபெற்ற தமிழ்‌நாடு சட்டமன்றப் பொதுத்‌ தேர்தலில்‌ தன்னந்தனியாக களம்‌ கண்டு, தொடர்‌ வெற்றி மூலம்‌ மீண்டும்‌ கழக அரசை அமைத்த மகத்தான சாதனையாளர்‌ நம்‌ இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி ஜெயலலிதா‌ என்று கூறியுள்ளனர்.

தமிழக மக்களின் காவல் அரணாகவும், உண்மை ஊழியனாகவும் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் இருப்பினும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றல் நமக்கு உண்டு. அதிமுக அரசே தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பில் இருந்திட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். நேற்றும் இன்றும் நாளையும், அதிமுக ஆட்சியே மக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்ய உழைப்போம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றரைக்‌ கோடி கழக உறுப்பினர்களின்‌ ஒத்துழைப்பாலும்‌, தமிழ்‌ நாட்டு மக்களின்‌ பேராதரவாலும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தையும்‌, கழக அரசையும்‌ மாண்புமிகு அம்மா அவர்களின்‌ பூரண நல்லாசியோடு வழிநடத்தி வருகிறோம்‌. மாண்புமிகு அம்மா அவர்களின்‌ வழியில்‌ நாம்‌ செயல்படுகிறோம்‌ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago