டாஸ்மாக் இல்லாததால் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது!

Published by
Rebekal

நெல்லையில் வீட்டில் வைத்து கள்ள சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு தளர்வுகளற்ற ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஊரடங்கின் பொழுது அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் முதற்கொண்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மதுபான கடைகளும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கேட்டு பல மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சும் முயற்சிகளிலும் ஈடுபட்டு தொடங்கியுள்ளனர்.

நெல்லையில் உள்ள உள்ள சி.என் கிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகவும், சாராய நாற்றம் வருவதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை சந்திப்பு காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டியதும், போலீசார் வெளியில் இருப்பதை கண்ட வீட்டுக்குள் இருந்த இருவர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் பிடிபட்ட நபர்களிடமும் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் உடையான் மற்றும் சூரியமூர்த்தி என்பது கண்டறியப்பட்டது.

பின் அவர்கள் வீட்டை சோதனை செய்து கள்ள சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டிருந்த தெரிய வந்ததுடன், அதற்காக போடப்பட்டிருந்த ஊர்களில் இருந்து வெளியே வந்த நாற்றம் காரணமாகத்தான் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்கு தெரிய வந்துள்ளது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்ததுடன் உடையார் மற்றும் சூரிய மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். சாராயம் குடிக்காமல் இருந்ததால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் தான் கள்ள சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியதாகவும் அவ்விரவரும் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

11 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

12 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

13 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

14 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

14 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

15 hours ago