தூத்துக்குடியில் 12 இடங்களில் தீங்கு விளைவிக்கும் உலோகம் உள்ளது – கனிமொழி!

தூத்துக்குடியில் 12 இடங்களில் தீங்கு விளைவிக்கும் உலோகம் உள்ளது  இன்று தூத்துக்குடி வரும் முதல்வர் இது குறித்து ஆலோசிப்பாரா என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் 12 இடங்களில் தீங்கு விளைவிக்கும் உலோகம் உள்ளது  இன்று தூத்துக்குடி வரும் முதல்வர் இது குறித்து ஆலோசிப்பாரா என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று கன்னியாகுமரியில் நடத்திய ஆய்வினை தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் இன்று தூத்துக்குடி வருகிறார். இந்நிலையில் முதல்வருக்கு திமுக மக்களவை எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தூத்துகுடியிலுள்ள 12 இடங்களில் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் உலோகங்கங்கள் இருப்பதாக மாசு கட்டுப்பட்டு வாரியம் நடத்திய சோதனையில் கூறப்பட்டது. இன்று தூத்துக்குடி செல்லும் முதல்வர் வல்லுனர்களுடன் ஆயோசித்து அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிலத்தடி நீர் மற்றும் பூமியை மாசுபடுத்தக்கூடிய தொழில்சாலைகளுக்கு அனுமதி தருவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown nodeunknown node
தூத்துக்குடியில் 12 இடங்களில் தீங்கு விளைவிக்கும் உலோகம் உள்ளது – கனிமொழி!