தமிழக அரசு தொடர்ந்த டாஸ்மாக் வழக்கு.! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை.!

டாஸ்மாக் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவானது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

டாஸ்மாக் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவானது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 7 ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன் 2 நாட்கள் மதுக்கடைகள் திறந்திருந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளில் சரியான சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்பிற்குக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டன.

இந்த வழக்கில் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் திறக்க தடைவித்து, ஆன்லைனில் மட்டுமே மது விற்கவும் அறிவுறுத்தியிருந்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது மனுவில் பிழை இருப்பதாக கூறிய நிலையில் தற்போது தமிழக அரசு தாக்கல் செய்த இந்த மனுவானது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த டாஸ்மாக் வழக்கு.! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை.!