dubaif loods [file image]
Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில் ஓராண்டுக்கும் அதிகமான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் துபாயில் ஒருவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அதே போல அண்டை நாடான ஓமனில் 18 பேர் உயிரிழந்தனர்.
துபாய் சர்வதேச விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினத்தை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 2வது நாளாக விமான சேவை ரத்து செய்யப்பட்டள்ளது.
இரண்டாம் நாளாக இன்று சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
ஆம், துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைத்து விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…