மஸ்க் உடனான உறவை நீட்டிக்க விருப்பம் இல்லை – ட்ரம்ப் திட்டவட்டம்!
தொழிலதிபர் எலான் மஸ்க் உடனான உறவு முறிந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் என்பது நாளுக்கு நாள் மேலும் தீவிரமடைந்து வருகிறது. டிரம்பின் வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு எதிராக மஸ்க் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்த மோதல் உருவாகியுள்ளது. “One Big Beautiful Bill” என்ற பொருளாதார மசோதவை குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் ஹவுஸில் நிறைவேற்றப்பட்டது.
இது பொருளாதாரத்திற்கு அதிக கடன் சுமையை ஏற்படுத்தும் என்று மஸ்க் விமர்சித்தார், மேலும் இந்த மசோதாவை “அருவருப்பானது” என்று கடுமையாகக் குறிப்பிட்டார். இதனால், டிரம்ப் மஸ்க் மீது கடும் அதிருப்தி அடைந்து பதிலுக்கு பேச இருவரும் மாறி மாறி வார்தைப்போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில் இன்று டிரம்ப், மஸ்க்குடனான உறவை சரிசெய்ய எந்த ஆர்வமும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மஸ்க்குடன் பேசுவதற்கு தனக்கு நேரமோ ஆர்வமோ இல்லை என்று கூறிய அவர், அவர்களது உறவு முடிந்துவிட்டதாகவே கருதுவதாகத் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் ” நான் வேறு வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். அவரிடம் பேசும் எண்ணம் எனக்கு இல்லை. நான் அப்படித்தான் கருதுவேன். அவருக்கும் எனக்கும் உறவு முடிந்துவிட்டது.
இந்த மசோதாவின் உள் செயல்பாடுகளை எலான் அறிந்திருந்ததால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எலானில் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். நான் எலானுக்கு நிறைய உதவி செய்துள்ளேன். ஆனால் அவர் அதனையெல்லாம் மறந்துவிட்டார். இனிமேல் அவரிடம் பேச எதுவும் இல்லை” எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு மஸ்க் நிதியளித்தால், “மிகக் கடுமையான விளைவுகள்” ஏற்படும் என்று எச்சரித்தார். ஆனால், அந்த விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அவர் தெளிவாக கூறவில்லை எனவும்