இந்திய வம்சாவளி சமையல்கலை நிபுணரான ரிஷி ரூப் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட 31 வயதான ஆஸ்திரிய இளவரசி மரியா கேலிட்சன் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஆஸ்திரிய நாட்டு ராஜ வம்சாவளி தம்பதியான மரியா ஹன்னா மற்றும் பியோட்டார் கேலிட்ஸின் ஆகியோரின் மகளான மரியா கேலிட்சன் பெல்ஜியத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்து ஹாஸ்டானில் பணியாற்றினார்.
அங்கு, இந்திய வம்சாவளி சமையல்கலை நிபுணரான ரிஷி ரூப் சிங் என்பவரை கடந்த 21017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மரியா கேலிட்சன் – ரிஷி ரூப் சிங் தம்பதிக்கு 2 வயது மகன் உள்ளனர்.
unknown nodeஇவர் மாரடைப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி 31 வயதான மரியா பரிதாபமாக இறந்துவிட்டார். இவரது இழப்பு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.