உலகின் மிக வலுவான சூறாவளி ஜமைக்கா நாட்டை தாக்கியது! வைரலாகும் வீடியோ!

மெலிசா புயலின் தீவிரத்தை அளவிடவும், எச்சரிக்கை மையத்திற்கு துல்லியமான தகவல்களை வழங்கவும், அமெரிக்க விமானப்படையின் ரிசர்வ் குழு "சூறாவளி வேட்டைக்காரர்கள்" (Hurricane Hunters) புயலின் மையப் பகுதியான கண் (Eye) உள்ளே பறந்து சென்று படம் பிடித்துள்ளனர்.

US plane Hurricane Melissa

ஜமைக்கா :மாநிலத்தில் 174 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்று ரீதியான சூறாவளி கரையைக் கடந்தது. அக்டோபர் 28, 2025 அன்று, மெலிசா (Melissa) என்ற 5-வது வகை சூறாவளி, ஜமைக்காவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள நியூ ஹோப் (New Hope) அருகே கரையைத் தொட்டது. அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின் (NHC) தகவல்படி, புயல் கரையைத் தொடும்போது மணிக்கு அதிகபட்சமாக 185 மைல் (சுமார் 295 கி.மீ) வேகத்தில் காற்று வீசியது. இது ஜமைக்காவின் வரலாற்றில் 1851-ஆம் ஆண்டு பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகவும் சக்திவாய்ந்த புயலாகும்.

புயலின் மெதுவான வேகம் (மணிக்கு 7-8 மைல்) காரணமாக, அது ஜமைக்காவின் மேற்குப் பகுதியில் நீண்ட நேரம் தங்கி, சேதத்தை அதிகர்த்தது.மெலிசா புயலின் தாக்கம் ஜமைக்காவின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் கடுமையானது. பலத்த காற்று, மழை மற்றும் கடல் அலைகள் காரணமாக, வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானவை சேதமடைந்தன. ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் தெரிவித்தபடி, தென்மேற்குப் பகுதிகளான செயிண்ட் எலிசபெத் மற்றும் அண்டைப் பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

பேரிடர் தயார்நிலை மற்றும் அவசர மேலாண்மை அலுவலகத்தின் (ODPEM) இயக்குநர் ஜெனரல் ரிச்சர்ட் தாம்சன், “அங்கு அதிகப்படியான சேதம் ஏற்பட்டுள்ளது; பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகளுக்கு பெரும் பாதிப்பு” என்று கூறினார். சுற்றுலா துறைக்கு பெரும் அடி, ஏனெனில் சுமார் 25,000 சுற்றுலாப்பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். இன்டர்நெட் இணைப்பு 30% வரை சரிந்துள்ளது, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்காவில் 3 பேர், ஹைட்டியில் 3 பேர் மற்றும் டொமினிகன் குடியரசில் 1 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல் தாக்கம் ஏற்படும் முன் ஜமைக்காவில் 1,000-க்கும் மேற்பட்டோர் அடைக்கலங்களில் தங்க வைக்கப்பட்டனர், 850 அடைக்கலங்கள் திறக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை பாதுகாக்க, அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்தது. புயலின் மெதுவான இயக்கம் காரணமாக, சில பகுதிகளில் 700 மி.மீ (27.5 அங்குல) வரை மழை பெய்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. சர்வதேச சிவசேவை அமைப்புகள், சிவச் சிலுவை போன்றவை உதவி அளிக்க தயாராக உள்ளன.

புயல் கரையைக் கடந்த பிறகு, அதன் வலிமை குறைந்தது. NHC தகவல்படி, மெலிசா தற்போது 125 மை.ஆ. (200 கி.மீ/மணி) வேகத்தில் காற்று வீசும் 3-வது வகை சூறாவளியாக பலவீனமடைந்துள்ளது. ஜமைக்காவிலிருந்து விலகி, கிழக்கு கியூபாவை நோக்கி வடக்கு-வடகிழக்கு திசையில் மணிக்கு 8 மைல் வேகத்தில் நகர்கிறது. குவாண்டநாமோவிலிருந்து தென்மேற்கே 160 மைல் தொலைவில் உள்ளது. கியூபாவில் 10-20 அங்குல மழை, மலைகளில் 25 அங்குல மழைக்கு வாய்ப்புள்ளது, இதனால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம். பஹாமாஸ் வழியாக நகரும் புயல், 3-வது வகை அல்லது அதற்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கியூபா அதிபர் மிகுவெல் டயாஸ்-கேனெல், “பெரும் சேதம் ஏற்படும், ஆனால் நாங்கள் மீள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

unknown node
உலகின் மிக வலுவான சூறாவளி ஜமைக்கா நாட்டை தாக்கியது! வைரலாகும் வீடியோ!