அமெரிக்காவில் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி?

அமெரிக்காவில் இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு 8 மாதம் பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு 8 மாதம் பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் கொரோனாவால் அதிகமான பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா. இந்த நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இங்கு டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதன் காரணத்தால் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு வல்லுநர்கள் பரிந்துரை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. டெல்டா வைரஸிலிருந்து காப்பதற்கு இந்த பூஸ்டர் ஊசி பாதுகாப்பளிக்கும் என்று கருதுகின்றனர்.

இதனால் இது குறித்த ஒப்புதலை அமெரிக்க உணவுகள் மற்றும் மருந்துகள் நிர்வாகம் (எப்.டி.ஏ) இந்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.