ஆக்சிஜன், மருந்து பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்க – முக ஸ்டாலின்

Stalin said he had urged the authorities to take full-scale measures to prevent corona.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு முனைப்புடன் நடைபெற்றிட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினேன் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் வரும் 7ம் தேதி ஆளுநர் மாநிலகையில் முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில், முக ஸ்டாலினுடன், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

புதிய அரசு பதவியேற்பு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் தொய்வின்றி மேற்கொள்ள அறிவுறுத்தினேன். நோயாளிகள் அதிகரித்து வருவதால் படுக்கை வசதி, ஆக்சிஜன் போன்ற மருந்து  பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

unknown node