சமூக வலைத்தளங்களுக்கு குட் -பை ! பிரதமர் மோடி திடீர் முடிவு

பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

சமூக வலைத்தளமான ட்விட்டர்,பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப் உள்ளிட்டவற்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிக  அளவில் பயன்படுத்தி வருகிறார்.ட்விட்டரில் 53.3 மில்லியன் பின் தொடருகிறார்கள்,பேஸ்புக் 44 மில்லியன் பின் தொடருகிறார்கள்,இன்ஸ்டாகிராம் 35.2 மில்லியன் பின் தொடருகிறார்கள் ,யூடியுப்பில் 4.5 மில்லியன் பின் தொடருகிறார்கள்.

unknown node

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதாவது,இந்த ஞாயிறன்று ட்விட்டர்,பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப்போன்ற சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற நினைக்கிறேன்.இது குறித்து விரைவில் உங்களிடம் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டார். பிரதமரின் இந்த பதிவுக்கு பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.