சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி சிறப்பு விமானம் மூலம் அமீரகம் புறப்பட்டனர்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்தது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் அமீரகம் புறப்பட்டனர். மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அமீரகம் சென்றது குறிப்பிடத்தக்கது.