காயத்தால் விலகிய தவான் ..! அணியில் சேர்க்கப்பட்ட வீரர் யார் ?

இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை   2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து நியூசிலாந்துடன்  5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள்  மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய அணி  நியூசிலாந்து சென்றுள்ளது.

இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக 2:1 என்ற கணக்கில் வென்றது.இதனை அடுத்து நியூசிலாந்துடன் 5 டி -20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய அணி  நியூசிலாந்து சென்றுள்ளது. இந்தியா – நியூசிலாந்து மோதும் முதல்  டி -20  போட்டி ஆக்லாந்தில் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கு மட்டுமே இந்திய  வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் தவானுக்கு காயம் ஏற்பட்டது.இதனால் அந்த போட்டியில் முழுமையாக தவான் விளையாடவில்லை. தவானுக்கு காயம் ஏற்பட்டதால், நியூசிலாந்து பயணத்தில் இடம் பெறுவாரா? என்று வெகுவாக கேள்வி எழுந்தது.இந்நிலையில் நேற்று  தோள்பட்டை காயம் காரணமாக ஷிகர் தவான் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து விலகினார். தவானுக்கு பதிலாக நியூசிலாந்தில் இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் :

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் , லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப் பண்ட், ஜடேஜா, மணிஷ் பாண்டே, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, ‌ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.