நான்காவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது.இந்திய அணி வீரர் ரோகித் சர்மா மனைவி ரித்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென்று நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவருக்கு பெண் குழந்தைப் பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
unknown nodeஎனவே ஆஸ்திரேலியாவில் உள்ள ரோகித் சர்மாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மகிழ்ச்ச்சி அடைந்த அவர் சக வீரர்களிடம் இதை பகிர்ந்து கொண்டார். அவர்கள் ரோகித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதையடுத்து தனது மகளைக் காண அவர் உடனடியாக மும்பை திரும்புகிறார்.இதனால் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்.