நேற்று நடைபெற்ற எட்டாவது உலகக்கோப்பை போட்டியில் தென்னாபிரிக்கா, இந்தியா ஆகிய இரு அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற தென்னா பிரிக்காஅணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இந்நிலையில் நேற்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாகவும் , நிதானமாவும் விளையாடிய ரோஹித் சர்மா அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது மட்டுமல்லாமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்தார். இவரின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணி வெற்றிக்கு செல்ல உறுதுணையாக இருந்தது.மேலும் உலகக்கோப்பையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் ரோஹித் சர்மா இடம் பெற்றார்.அந்த பட்டியலில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சினை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளார்.முதல் இடத்தில் ஷிகார் தவான் 137 ரன்கள் அடித்து உள்ளார்.137 – Shikhar Dhawan (Melbourne), 2015122* – Rohit Shamra (Southampton), 2019111 – Sachin Tendulkar (Nagpur), 201197 – Sourav Ganguly (Hove), 1999
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சினை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா
நேற்று நடைபெற்ற எட்டாவது உலகக்கோப்பை போட்டியில் தென்னாபிரிக்கா, இந்தியா ஆகிய இரு அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற தென்னா பிரிக்காஅணி பேட்டிங் செய்ய