தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்திய அணி ..!

Default Image

தென்ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 போட்டிகளில் விளையாடினார். நேற்று சூரத்தில் கடைசி டி20 போட்டி நடைபெற்றது.போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 175 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தனர்.இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான லிசெல் லீ 84 , சுனே லூஸ் 62 ரன்கள் அடித்தனர்.


பின்னர் 176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறி கொடுத்து 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதில் அதிகபட்சமாக வேத கிருஷ்ணமூர்த்தி 26 ரன்கள் எடுத்தார்.மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்.
தென்ஆப்பிரிக்கா அணியில் நாடின் டி கிளார்க் 3 விக்கெட்டை பறித்தார்.மேலும் இந்த தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதில் இரண்டு போட்டி மழையால் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services