Tag: Indian Air Force

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை அதிகாரிகள், டெல்லியில் இரண்டாவது நாளாக இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்திற்குப் பிறகு இரு நாடுகளின் எல்லைகளிலும் நிலைமை எப்படி இருக்கிறது? போர் நிறுத்தத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன? வீரர்களுக்கு என்ன வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன? இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இதுபோன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர். அப்பொழுது, […]

AN Pramod 4 Min Read
AN Pramod -Operation sindoor

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும், ஜம்முவின் ரஜோரி, உரி, அக்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள பொது மக்கள் வீடுகளை குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இன்று காலை 5 மணியளவில் அமிர்தசரஸின் காசா காண்ட் மீது பறந்த பாகிஸ்தான் டிரோன்களை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்ததாக […]

India-Pakistan war 6 Min Read
scattered missile parts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும் தவறான தகவல்களை இந்திய விமானப்படை மறுத்துள்ளது. இது பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் இந்திய விமானப்படை (IAF) விமானிகளில் ஒருவரான ஸ்க்வாட்ரான் லீடர் ஷிவாங்கி சிங்கின் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர், அவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டதாக பரவும் போலிச் செய்தகளை மத்திய அரசு சார்பில் […]

India Fights Propaganda 5 Min Read
Squadron Leader Shivangi Singh

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை ஏவிய பாகிஸ்தான் தற்போது ஜம்மு எல்லைக்கு அப்பாலில் இருந்து, டிரோன்களை அனுப்பி ஊடுருவுகிறது. அதாவது, ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சைரன் ஒலி மூலம் மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதேபோல், அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் படையினருக்கு எல்லையில் […]

#Pakistan 3 Min Read
Drones intercepted in Jammu

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய படைகள் வரலாறு படைத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் நடவடிக்கையால் நாடே பெருமையடைந்துள்ளது. நள்ளிரவில் நமது படைகள் துல்லியமாக இலக்கை தாக்கியதாக தெரிவித்த ராஜ்நாத் சிங், ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியாவிற்கு முப்படைகளும் பெருமை சேர்த்துள்ளன, பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான திட்டமிடல் தான் தாக்குதலை சாத்தியமாக்கியது. அப்பாவி […]

#Pakistan 4 Min Read
OperationSindoor - RajnathSingh

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் வீரர்கள் குவிக்கப்பட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல இந்திய விமானப்படையும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன. அதில், உத்திர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள கங்கா அதிவிரைவு சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் […]

Ganga Expressway 6 Min Read
Ganga Expressway IAF

ஆக்ரா அருகே விமானப்படை விமானம் விபத்து.!

உத்தரப்பிரதேசம் : ஆக்ரா அருகேIAF-ன் MiG-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரிலிருந்து விமானம் புறப்பட்டு, பயிற்சிக்காக ஆக்ராவுக்கு சென்று கொண்டிருந்தபோது நேரிட்ட விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்திற்கு முன்பே விமானத்தில் இருந்து விமானி பாராசூட் மூலம் பத்திரமாக வெளியேறி உயிர் தப்பியதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. போர் விமானம் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ???? A MiG-29 fighter […]

IAF 3 Min Read
IAF MiG-29 accident

92வது ஆண்டு விமானப்படை தினம்.! சென்னை வானில் மீண்டும் வட்டமடித்த இந்திய விமானப்படை.!

சென்னை : இன்று (அக்டோபர் 8) இந்திய விமானப்படை தினம் கொண்டப்படுகிறது. விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமை அன்று சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேஜாஸ் , ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் உட்பட 72 விமானங்களின் பிரம்மிப்பூட்டும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் பேர் ஒன்றுகூடினர். வான் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியது லிம்கா […]

#Chennai 5 Min Read
Indian Air Force

விமான சாகச நிகழ்ச்சி., 5 பேர் உயிரிழப்பு., 7 பேர் சிகிச்சை நிலவரம் என்ன.? அமைச்சர் விளக்கம்!.!

சென்னை : இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த உயிரிழப்புகள் பற்றியும், சென்னை மெரினாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். […]

#Chennai 8 Min Read
Air Show 2024 - Minister Ma Subramanian

விமான சாகச நிகழ்ச்சி.! 5 பேர் உயிரிழப்பு.! சிகிச்சை பெற்றுவருவோர்களின் நிலை.?

சென்னை : மெரினா கடற்கரையில் நேற்று விமானப்படை சாகச நிகழ்ச்சி கொண்டாட்டமாக தொடங்கி சோகமான நினைவுகளை கொடுத்துவிட்டது. இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ரபேல் , தேஜஸ் உள்ளிட்ட 72 வகையான விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். விமானப்படை சாகச நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை சென்னை மெரினா போன்ற சுற்றுலா தளத்தில் நடைபெற்றதால் […]

#Chennai 4 Min Read
Marina Air Force 2024

அதிரும் மெரினா..! அனல் பறக்க போகும் விமான சாகச நிகழ்ச்சி 2024!

சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய விமான படை சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், விமானப் படையினர் இதுவரை மேற்கொண்ட சாதனைகள், வெற்றிகள் ஆகியவற்றை பறைசாற்றும் விதமான தகவல் அதில் இடம்பெற்றுள்ளன. நாளை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Rehersals of Chennai Airshow programme held […]

#Chennai 4 Min Read
Chennai air show 2024 a

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து.!

Air Force Plane Crash:  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் யாரும் இல்லாத நிலையில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விரைந்துனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்திய விமானப் படையினர் வழக்கமான […]

#Rajasthan 3 Min Read
Air Force Plane Crash

ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விபத்து!

plane crash : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. பாலைவனப் பகுதியான ஜெய்சால்மர் அருகே பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.! அதாவது, செயல்பாட்டு பயிற்சியின்போது ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் காலனி பகுதியில் இந்திய விமானப்படை விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது தீப்பிடித்து எரிந்தது. பின்னர் […]

#Accident 4 Min Read
Tejas Aircraft Crashes

மாயமான விமான பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்பு!

கடந்த 2016ம் ஆண்டு வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் An-32 (K-2743) விமானம், கடந்த 2016 ஜூலை 22ம் தேதி வங்கக்கடல் பகுதியில் ஒரு பணிக்காக சென்றபோது காணாமல் போனது. அதாவது, சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம், வங்கக்கடல் பகுதியில் மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, காணாமல் போன விமானம் மற்றும் […]

AN- 32 aircraft 4 Min Read
AN-32(K-2743)

ஐஏஎஃப் பயிற்சி விமானம் விபத்து..! இரண்டு விமானிகள் உயிரிழப்பு.!

தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் உள்ள துண்டிகல் விமானப்படை அகாடமியான ஏஎஃப்ஏவில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக பிலாடஸ் பிசி 7 எம்கே-II (Pilatus PC 7 Mk II) விமானம் புறப்பட்டது. திடீரென டூப்ரான் என்ற இடத்தில் உள்ள ரவெல்லி கிராமத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தெரிவித்த இந்திய விமானப்படை, விமானம் விபத்தானதில் […]

#Rajnath Singh 3 Min Read
Pilatus PC 7 Mk-II

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணி

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வான்வெளி அத்துமீறலைத் தடுக்க இந்திய விமானப்படை ரோந்துப் பணியில் ஈடுபட்டதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சீனாவின் அத்துமீறல்களைத் தடுக்க IAF அதன் போர் விமானங்களை சமீபத்திய வாரங்களில் 2-3 முறை ரோந்து பணியில் […]

- 2 Min Read
Default Image

மீண்டும் ஒரு துயரச் சம்பவம்….ராணுவ விமானம் விபத்து – விங் கமாண்டர் பலி!

ராஜஸ்தான்:ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம்,நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில்,விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை […]

Ashok Gehlot 8 Min Read
Default Image

#Breaking:”முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி”-இந்திய விமானப்படை!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் விரைந்து உதவிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில்,விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.மேலும்,ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 14 பேரில்,முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். எனினும்,கேப்டன் வருண் சிங் மட்டும் 80% காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது பெங்களூர் […]

#HelicopterCrash 5 Min Read
Default Image

நிலவில் கால் பதிக்க தேர்வாகியுள்ள இந்திய வம்சத்தை சேர்ந்த அமெரிக்க விமான படை அதிகாரி!

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவில் கால் பதிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 விண்வெளி வீரர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிகாரி ராஜா சாரி அவர்களும் இடம் பிடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நிலவில் தெற்கு பகுதியில் கால் பதிப்பதற்காக அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா தனது ஆர்டெமிஸ்  எனும் திட்டத்தின் கீழ் 18 விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்துள்ளது. தற்பொழுது இது குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் […]

Indian Air Force 4 Min Read
Default Image

இம்மாத இறுதிக்குள் 5 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை.! 22ஆம் தேதி முதல் தளபதிகளின் ஆலோசனை கூட்டம்.!

2020 ஜூலை இறுதிக்குள் இந்தியாவில் 5 ரபேல் போர் விமானங்கள் களமிறக்கப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஜூலை 29-ம் தேதி விமானப் படையில் இந்த ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும் எனவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த அதிநவீன போர் விமானமானது, ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பின்னர் விமானத்தை இயக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் இந்திய விமானப்படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஃபேல் விமானங்களில் வரவுகளை அதிகபடுத்துமாறு இந்தியா பிரான்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது. முதலில் ஜூலை இறுதிக்குள் […]

france 5 Min Read
Default Image