மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தளபதி விஜய் மரக்கன்றுகளை நட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இவர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் நடிக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு கிரீன் இந்தியா சேலன்ஜை செய்ததுடன் விஜய், ஸ்ருதிஹாசன் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்டுள்ளார். மேலும் மகேஷ் பாபு அவர்களே இது உங்களுக்காக என்றும், இங்கே ஒரு பசுமையான இந்தியா என்றும், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், நன்றி என்று பதிவிட்டுள்ளார். தற்போது விஜய்யின் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…