பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை ஏம்பல் கிராமத்தில் இன்று, ஒரு பிறந்தநாள் விழாவில் பங்கேற்றவர்கள் விருந்து உண்ட பின்னர் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகினர்.

pudukkottai -death

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருந்து உண்ட சுமார் 27 பேருக்கு வாந்தி, மயக்கம், மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதில், மருத்துவமனைக்கு செல்லாத 60 வயதான கருப்பையா என்பவர் உயிரிழந்தார், இது தொடர்பாக,  RTO, வட்டாட்சியர் உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையில், விருந்தில் வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போயிருக்கலாம் அல்லது தயாரிப்பில் சுகாதாரக் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கூடுதலாக, ஏம்பல் காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், உணவு தயாரிக்கப்பட்ட இடத்தின் சுகாதார நிலை மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்