சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. விழாவில் பேசிய மிஷ்கின் “நான் ஒரு குடிகாரன்..எனக்கு மிகப்பெரிய போதை இளையராஜா..இளையராஜா ஒன்று ஒருத்தன் இருக்கிறான். நான் குடித்து விட்டால் அவர் தான் சைடிஸ். அவர் தான் பலரும் குடிக்க காரணம் எனவும் சில கெட்ட வார்த்தைகளையும் மேடையில் பேசினார். மிஷ்கின் பொது மேடையில் இப்படி […]
கொச்சி : விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தினை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இன்னும் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை தொடங்காமல் உள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்கிற வகையில் லைக்கா தற்போது இரண்டு படங்களின் ப்ரோமோஷன்களை ஒரே நிகழ்ச்சியிலும் நடத்தியிருக்கிறது. அதாவது, லைக்கா விடாமுயற்சியை போல மலையாளத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் மோகன்லாளை வைத்து இயக்கியுள்ள எம்புரான் திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கொச்சியில் […]
சென்னை : விஜயின் கடைசி திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அரசியல் பயணத்தில் ஈடுபடுவதாகவும் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் எனவும் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனவே, அவருடைய கடைசி படம் எந்த மாதிரி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துள்ளனர். முன்னதாகவே, விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு கொண்டு இருந்தது. அதனை […]
சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. எச்.வினோத்தும் கொஞ்சம் அரசியல் படத்தில் இருக்கும் என கூறியிருந்தார். இதுவரை படத்தின் தலைப்பு என்னவென்று அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு படத்தின் பெயர் என்னவென்பது குறித்து படக்குழு […]
சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டது குறித்து அஜித்குமாரன் நன்றி தெரிவிக்கும் வகையில், தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அஜித் கூறியதாவது ” இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். […]
சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும். இந்த சூழலில், இந்த ஆண்டுக்கான (2025) 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில், அஜித்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நடிகர்களில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், […]
சென்னை : மதுரவாயல் பகுதியில் தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், கலைமாமணி விருதுகள் என பல பொருட்களை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மதுரவாயல் போலீசார் கஞ்சா கருப்புடன் சென்று வீட்டை ஆய்வு செய்தனர். இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உள்ளனர். போலீசா வீட்டை ஆய்வு செய்யும் பொழுது, ” வாடகை வீட்டில் வசித்து […]
மும்பை : இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படமான ‘எஸ்.எஸ்.எம்.பி29’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில், மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்புக்காக படப்பிடிப்பிற்காக பிரியங்கா சோப்ரா தற்பொழுது ஐதராபாத்தில் இருக்கிறார். அவர் சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்டார். மேலும், இந்த வார தொடக்கத்தில், அவர் இந்த புதிய படத்தை தொடங்குவதற்கு முன், சில்குர் பாலாஜி கோயிலுக்குச் சென்று ஆசி பெற்றார். இந்த நிலையில், ராஜமௌலி தனது […]
மும்பை: போதைப்பொருள் மாஃபியாவுடன் திருமணம், மேலாடையின்றி போட்டோஷூட் இப்படி பல சர்ச்சையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி மகா கும்பமேளாவில் சந்நியாசம் (மகாமண்டலேஸ்வரர்) வாங்கி தன் பெயரை `மாய் மம்தா நந்த்கிரி’ என மாற்றி கொண்டுள்ளார். இவர், பாலிவுட்டில் நுழைவதற்கு முன், தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். ஆம், விஜய் தயாரிப்பில் அவரின் அம்மா ஷோபா இயக்கத்தில் “நண்பர்கள்” என்ற படம் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாமண்டலேஸ்வரராக வருபவர் சன்னியாசியாக இருக்க […]
இசையமைப்பாளர் அனிருத் ஒரு படங்களுக்கு விமர்சனம் கொடுத்தார் என்றால் அந்த படம் பெரிய ஹிட் படமாக மாறும் என ரசிகர்கள் நம்புவது வழக்கமான ஒன்று. ஏனென்றால், விக்ரம், லியோ, ஜெயிலர் ஆகிய படங்களுக்கு அவர் தான் இசையமைத்திருந்தார். இந்த படங்கள் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்துவிட்டு படம் பெரிய ஹிட் ஆகும் என்பது போல தன்னுடைய எமோஜிகளின் மூலம் விமர்சனத்தை கூறுவார். அப்படி அவர் இதுவரை கூறிய படங்களும் அவர் எமோஜிக்கு ஏற்றபடி பெரிய வெற்றிகளையும் சந்தித்தது. […]
துபாய் : ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்கிற பாடலை ரசிகர் ஒருவர் தன்னிடம் பாடி காட்ட அஜித், அதனை ரசித்து கேட்டார். சமீபத்தில், துபாயில் நடந்த 24எச் பந்தயத்தில் அஜித்குமார் மூன்றாம் இடம் பெற்றார். துபாய் கார் பந்தய வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் போர்ச்சுகலுக்குப் புறப்பட்டு, தகுதிச் சுற்றில் பங்கேற்றார். இந்த நிலையில், துபாயில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில் அன்பான ரசிகர் ஒருவரை சந்தித்திருக்கிறார் நடிகர் அஜித். அந்த ரசிகர், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்கிற அஜித்தின் […]
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஃபிவர் ரசிகர்களை தொற்றி கொண்டு விட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள சவதீகா (Sawadeeka) பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது மட்டும் அல்லாமல் பாட்டிகள் கொண்டாடும் பாடலாக அமைந்திருக்கிறது. இது வரை இந்த பாடலுக்கு எத்தனையோ, குட்டீஸ் , சுட்டீஸ் நடனம் ஆடியிருந்தாலும், இப்பொது ஜாலியாக 3 பாட்டிகள் டான்ஸ் ஆடிய வீடியோ நெட்டிசன்களை ‘அடேங்கப்பா’ என சொல்ல வைத்திருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பட்டி தொட்டி […]
சென்னை : மல்டி டேலண்ட் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் மணிகண்டன் என்று சொன்னால் கூட அதில் மாற்றுகருத்து இருக்காது. ஏனென்றால், நடிப்பதை தவிர்த்து படங்களுக்கு வசனம் எழுதுவது, மற்ற நடிகர்கள் போல மேமிக்கிரி செய்வது என அசத்தி வருகிறார். இப்போது மணிகண்டன் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்தாலும் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். அந்த மாதிரி ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது அவருடைய குடும்பத்திற்கு விஜய் சேதுபதியும் […]
சென்னை : விஜயின் அரசியல் வருகை பற்றிய கேள்வி அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பார்த்திபனிடம் விஜயின் அரசியல் செயல்பாடு அவருடைய அரசியல் வருகை குறித்து உங்களுடைய கருத்து என்ன? என கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் ” என்னைப்பொறுத்தவரையில் நான் எல்லா விஷயங்களையும் பாசிட்டிவாக பார்ப்பேன். நண்பர் விஜய்க்கு அரசியல் வரவேண்டும் என்று அவருக்கு எந்த அவசியமும் இல்லை. சினிமாவில் பெரிய […]
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இயக்குநர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்தும், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது குறித்தும் பேசியுள்ளார். அஜித் குமார் கார் ரேஸ் குறித்து மகிழ் திருமேனி, “ ரேஸிக்கு பங்கேற்கப்போவதை அஜித் சார் முன்கூட்டியே சொல்லிவிட்டார். ரேஸில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். […]
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் முழுமையாக அரசியலில் நுழைவதற்கு முன்பாகவே விஜய்யின் கடைசிப் படம் என்று கூறப்பட்டு, எச்.வினோத் இயக்கிய தளபதி 69 படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் இல்லாமல், கமர்ஷியல் கதை களத்தில் உருவாகுவதாக கூறப்பட்டது. ஆனால், படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் “தலைவா” படத்தில் விஜய் […]
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என பல படங்களில் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயசீலன். 40 வயதான அவர் கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மஞ்சள்காமாலை தீவிரமடைந்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது உடல் ஸ்டான்லி […]
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சாமுவேல் கோல்ட்வின் தியேட்டரில் வழங்கப்படவிருக்கும் 97-வது அகாடமி விருதுகளை கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குவார். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பரிந்துரைப் பட்டியலில் படங்கள், நடிக நடிகைகள் என அனைத்து […]
சென்னை : சென்னையில் கடந்த சனிக்கிழமை (18.01.2024) நடைபெற்ற “Bottle Radha” இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மிஸ்கின் மேடையில், மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி பேசியிருப்பதோடு, “ஒரு குவார்ட்டர் அடித்து விட்டு படம் பார்க்க வா, இல்லேன்னா படம் பார்த்துட்டு போய் ஒரு குவார்ட்டர் அடி” என குடியை ஊக்குவிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த விழா மேடையில் சிறப்பு அழைப்பாளர்களாகவும், மேடைக்கு முன் பார்வையாளர்களாகவும் பெண்கள் பலர் கலந்து கொண்டிருந்த […]
சென்னை : அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் படம் குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விடாமுயற்சி படத்தின் கதை என்னுடையது அல்ல. இந்த மாதிரி ஒரு கதையில் படம் எடுக்கவேண்டும் என்று என்னிடம் […]