சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனியார் நாளிதழ் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், ”2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் NDA கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் அமித் ஷா கூறியிருந்தார். மேலும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் […]
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை, அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தரவரிசை எண்ணை http://tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அதன்படி, மொத்தம் 145 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூர் மாணவி […]
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக இபிஎஸ் வருவார், அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று அதிமுக திரும்ப திரும்ப கூறி வருகிறது. ஆனால் அமித்ஷாவோ, இபிஎஸ் முதல்வராக வருவார் என்று கூறாமல், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று குறிப்பிட்டுள்ளார். இது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘ NDA கூட்டணியை பொறுத்தவரையில் […]
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். தனியார் நாளிதல் ஒன்றிக்கு பேட்டியளித்த அவர், லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்றார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் பரப்புரை மூலம் ஓட்டுகளை திரட்டினால், நிச்சயம் NDA அரசு அமையும் என கூறினார். கூட்டணி ஆட்சி தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? […]
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, மாநில அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள். மாநில செயற்குழு என்பது கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் ஒரு முக்கிய அமைப்பாகும். இந்தக் கூட்டத்தில் கட்சியின் […]
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ‘கூமாபட்டி’ கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. ‘இந்த பக்கம் பார்த்தா அமேசான் காடு மாதிரி இருக்கும் அந்த பக்கம் பார்த்தா அந்தமான் மாதிரி இருக்கும்’ என இளைஞர் ஒருவர் ரீல்ஸ் பதிவிட்ட நிலையில், பலரும் கூகுள் மேப்பில் கூமாபட்டியை தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி பலரும் அந்த இடத்திற்கு வந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்ஸ்டாகிராம் மூலம் டிரெண்டாவதால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற […]
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும் அதற்கு திமுகவை சேர்ந்தவர்கள் பதில் அளித்து வருவதும் அரசியல் வட்டாரத்தில் வழக்கமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இப்போது அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? என மிகவும் காட்டத்துடன் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய […]
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதே போன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். மாநாடு நன்றாக […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன், தினமும் ஆட்டிறைச்சி விலையை நிர்ணயித்து அறிவிக்கும் வகையில் ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த முயற்சி, மாநிலம் முழுவதும் ஆட்டிறைச்சி விலையில் ஒரே மாதிரியான தன்மையை உறுதி செய்வதோடு, வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான விலை நிர்ணயத்தை வழங்கும். இந்த அறிவிப்பு, ஜூன் 26, […]
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பொது, வடமேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரையில் நிலவிய காற்றுச்சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை […]
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,”அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் மதநல்லிணக்கத்தோடு வாழும் தமிழ்நாட்டில் மதத்தை பயன்படுத்தி எதுவுமே செய்யமுடியவில்லையே என்று கதறுகிறது மதவாத கூட்டம். தமிழ்நாடு பெரியார், அண்ணா, கலைஞரின் மண். இங்கு மத அரசியல் எடுபடாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”பிரதமர் […]
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில் முடிவுற்ற 90 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். மேலும், ரூ.68.76 கோடி மதிப்பீட்டில் 60 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் விழா மேடையில் பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 […]
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராமதாஸ், ”தாம் உயிருடன் இருக்கும் வரை, பாமகவுக்கு தாம்தான் தலைவர் என்று கூறினார். திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்தது போல, தாமும் பாமக தலைவராக இருப்பேன்” என்றும் ராமதாஸ் உறுதியாக தெரிவித்துள்ளார். அன்புமணி குறித்த கேள்விக்கு, ”அவர் தான் சொல்வது போல கேட்டாக வேண்டும். அன்புமணி செயல் தலைவராக மட்டுமே கட்சியில் நீடிப்பார். மு.க.ஸ்டாலின் […]
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இந்த மீனவர்கள் இரண்டு பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது, இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கி, மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதல் நாகை மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதேபோன்ற சம்பவங்கள் இலங்கை கடற்படையினரால் தமிழக […]
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது போதையில் ஆபாச நடனம் ஆடியதாகவும், பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறியதாகவும் கூறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகராகப் பணியாற்றும் கோமதிநாயகம் (வயது 30) உள்ளிட்ட சில பூசாரிகள் […]
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால், மழையின் தாக்கம் இங்கு அதிகமாக உள்ளது. ஏற்கனவே, நேற்றும் இன்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் நலன்கருதி, வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக […]
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நீதியை உறுதி செய்வதோடு, அவர்களின் திறமைகளை அரசு பணிகளில் மேலும் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு, உடலில் 40 […]
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் குளித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியான சூழலில், பா.ம.க சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். புறகு அவர் நலமுடன் சிகிச்சை பெற்று மீண்டு வரவேண்டும் என அன்புமணியும் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். பிறகு அருள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று விடும் திரும்பினார். இதனையடுத்து இன்று […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக முக்கிய தகவலை கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். சுற்றுப்பயணம் தஞ்சாவூரில் தொடங்கி, 42 நாட்களில் 38 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது, தவெகவின் மாவட்ட […]
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, அரசியல் பயணத்தில் இணையவிருப்பதாகவும், பாஜகவில் மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னோடியாக, அவர் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து, அவருடனான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு, அவரது அரசியல் நுழைவுக்கு முக்கிய […]