சிம்புவிற்கு அடுத்த ஆண்டு திருமணம்- ஜெய் கூறிய தகவல்.!

சிம்புவிற்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கலாம் என்று நடிகர் ஜெய் கூறியுள்ளார்.

சிம்புவிற்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கலாம் என்று நடிகர் ஜெய் கூறியுள்ளார்.

நடிகர் ஜெய் மற்றும் சிலம்பரசன் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து கடந்த 2016-ஆம் ஆண்டு உருவான வேட்டை மன்னன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள் ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ஜெய், சமீபத்திய உரையாடலின் போது தனது திருமணத் திட்டங்களைப் பற்றித் மணம் திறந்துள்ளார். அதில் “சிலம்பரசன் டிஆரின் திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன். அவருடைய திருமணம் அடுத்த வருடம் நடக்கலாம் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

ஜெய் நடிப்பில் நடிப்பில் தற்போது பார்டி, சிவ சிவா, எண்ணித்துணிக ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. விரைவில் இதற்கான ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.