வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக இப்படம் வெளியாகிறது.
unknown nodeஇந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளது.
unknown nodeவெங்கட்ப்ரபுவின் அடுத்த திரைப்படம்.?
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு பான் இந்தியா படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் அரவிந்த் சாமி, பிரபுதேவா, கஜோல் ஆகிய மூவரும் நடிக்கவுள்ளதாகவும், நடிகர் சுதீப் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
சுதீப்பை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. மேலும், வெங்கட் பிரபு இயக்கும் இந்த பான் இந்தியா படத்தில் பிரேம் ஜி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeமேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் அல்லது இசையமைப்பாளர் தமன் இருவரில் ஒருவர் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநாடு படம் வெளியான பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஅரவிந்த் சாமி, பிரபுதேவா, கஜோல் மூன்றுபேரும் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் எனப்து குறிப்பிடத்தக்கது.