அமெரிக்காவில் வழங்கப்படும் சினிமாவுக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் திரைப்படம் இறுதி பட்டியலில் இருந்து வெளியேறியது.
பி.எஸ்.வினோத் ராஜ் எனும் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவான திரைப்படம் கூழாங்கல். இந்த திரைப்படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரித்திருந்தனர். இந்த திரைப்படம் பல்வேறு விருது விழாக்களுக்கு அனுப்பப்பட்டு பல்வேறு விருதுகளை குவித்தது.
படத்தை பார்த்த பலரும் திரைப்படத்தை வெகுவாக பாராட்டினர். இந்த திரைப்படம் இந்திய சினிமா சார்பில் சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க பட்டது.
ஆனால், இறுதிக்கட்டத்தை நோக்கி சென்ற கூழாங்கல், தற்போது அந்த இறுதி பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆஸ்கர் விருது பட்டியலில் நமது திரைப்படம் வந்துள்ளதா என பார்ப்பதே பெருமையாக இருக்கிறது. இயக்குனர் வினோத் ராஜ்க்கு நன்றிகள். கூழாங்கல் திரைப்படத்தை ஆஸ்கர் பரிந்துரைக்கு தேர்வு செய்த இந்திய தேர்வு குழுவுக்கு நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.
unknown node