விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில் எப்போது திருமணம் செய்ய போகிறார்கள் என்று காத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல்’ வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா அவ்வப்போது பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது உண்டு. குறிப்பாக இருவரும் புதிய கார் வாங்கி பல்லவன் இல்லம் அருகேயுள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
unknown nodeஅதனை தொடர்ந்து தற்போது, சென்னை பாரிமுனையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில், நேற்று விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது சமீபத்தில் சென்னை மேயராக பொறுப்பேற்ற பிரியா ராஜன் அவர்களும் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் தரிசனத்தின் போது மேயர் பிரியா ராஜன் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
unknown node