நம்ம பிட்சை நாம் தான் புரிந்தது கொள்ள வேண்டும் -தோனி

This news gives inforamtion about We need to understand that we are just a pitch Dhoni

12-வது ஐ.பி.எல். போட்டியில் லீக் சுற்றில் முதல் இரண்டு இடத்தை பிடித்த மும்பை அணிக்கும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் முதல் தகுதி சுற்று நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில்  4 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து  132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 5-வது முறையாக சென்றது.

மும்பை அணியுடன் தோற்றத்தை பற்றி  கேப்டன் தோனி கூறுகையில், “போட்டியில் யாராவது ஒருவர் தோற்கத்தான் வேண்டும். நம்ம பிட்சை நாம் தான் புரிந்தது கொள்ள வேண்டும் ஆனால் நாங்கள் அதை செய்ய தவறி விட்டோம்.

unknown node

மேலும் பேட்ஸ்மேன் அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப பேட்டிங் செய்ய வேண்டும். சூழல் பந்து வீச்சாளர்கள் பந்தை பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் தள்ளி போட்டு இருக்க வேண்டும். நாங்கள் கொஞ்சம் சிறப்பாக பந்து வீசி இருக்கலாம் என எனக்கு தெரிகிறது.

துரதிர்ஷ்டவசமாக சில கேட்ச்களை தவற விட்டோம் .மேலும் நாங்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதால் மீண்டும் வாய்ப்பு உள்ளது” என கூறியுள்ளார்.