இந்தியா

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவ நிலையங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் தாக்குதல் தொடருவதால், பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர் இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் தொகை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) அனுமதி அளித்தது. கடன் வழங்க இந்தியா […]

#Kashmir 5 Min Read
Omar Abdullah - IMF

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று முந்தின இரவு போலவே நேற்று இரவும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனை இந்திய ராணுவம் தடுத்து பாக். ட்ரோன்களை […]

#Delhi 3 Min Read
Pak Lanch pad destroyed by indian army

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இரு நாட்டு எல்லையோர பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடல், பொதுமக்கள் தங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் என தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல்வேறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வெளியான தகவலின்படி போர் […]

#Delhi 4 Min Read
32 Airports closed

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர தாக்குதல்களுக்கும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பகல் நேரத்தை காட்டிலும் இரவு நேரத்தில் தான் தாக்குதல்கள் அதிகமாக இருக்கின்றன. நேற்று இரவு இந்தியா எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. அதனை இந்திய ராணுவம் முறியடித்து இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் […]

#Delhi 4 Min Read
Pak drone in India Borders

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை ஏவிய பாகிஸ்தான் தற்போது ஜம்மு எல்லைக்கு அப்பாலில் இருந்து, டிரோன்களை அனுப்பி ஊடுருவுகிறது. அதாவது, ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சைரன் ஒலி மூலம் மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதேபோல், அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் படையினருக்கு எல்லையில் […]

#Pakistan 3 Min Read
Drones intercepted in Jammu

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சக செயலாளர் மற்றும் ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அப்போது விங் கமாண்டர் வியோமிகா சிங் பேசுகையில், ”வான் எல்லையை மூடாமல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது, பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா […]

#Pakistan 4 Min Read
Vyomika Singh

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சக செயலாளர் மற்றும் ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதில், தாக்குதல் குறித்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ”இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது. பொய்த் தகவல் மூலம் உலகை பாகிஸ்தான் ஏமாற்றுகிறது என […]

#Pakistan 4 Min Read
Vikram Misri

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து வந்தன. இந்நிலையில், இதுவரையிலான நிலவரம் என்ன? என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? உள்ளிட்ட களநிலவரங்கள் தொடர்பாக நம் வெளியுறவு செயலர் மற்றும் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் புகைப்படத்தைக் காட்டி விளக்கிய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, ”எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்தியா மீது பாகிஸ்தான் […]

#Pakistan 3 Min Read
Sofia Qureshi

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) கடிதம் எழுதியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்த கடிதம், 1968 ஆம் ஆண்டு குடிமைப் பாதுகாப்பு விதிகளின் பிரிவு 11 இன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியது. இது மக்களையும் சொத்துக்களையும் தீங்கு […]

#Pakistan 3 Min Read
amit shah

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட அதிகாரத்தை வழங்கியுள்ளது. இராணுவ விதிகள் 1948 இன் விதி 33 இன் கீழ், எடுக்கப்பட்ட இந்த முடிவு, வழக்கமான இராணுவத்தை கூடுதலாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படி, இராணுவத் தளபதி இப்போது அனைத்து பிராந்திய இராணுவ அதிகாரிகளையும் பதிவுசெய்யப்பட்ட பணியாளர்களையும் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்க அல்லது வழக்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு துணைபுரிய அழைக்கலாம். மேலும், நாட்டில் […]

Centre Authorises 3 Min Read
Army Staff

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது, இப்படி எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது, மோதல்கள் இன்னும் தொடர்கின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலில், ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் வீர […]

#Kashmir 5 Min Read
India Pakistan War

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்! 

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை நோக்கி பாகிஸ்தான் ஏவிய டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது.  இந்த அசாதாரண சூழல் குறித்து மத்திய அரசும் தொடர்ந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் , இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை. இங்கு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை பொதுவெளியில் பாதுகாப்பு […]

#Delhi 5 Min Read
Ministry of Defence Rajnath Singh

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி! 

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதனை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் தடுத்தி […]

Border Security Force 4 Min Read
BSF killed 7 Terrorists in Samba J&K

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் பள்ளி கல்லூரிகள் கால வரையின்றி மூடப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இமாச்சல் பிரதேசத்திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும் குறிப்பிட்ட இடங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாநிலங்களில் போலீசார் […]

#Delhi 4 Min Read

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து! 

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முதல் பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த முற்படுவதும், அதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்துவதுமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியை ஒட்டிய மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் […]

5 Min Read
India Pak War tensions

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்! 

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் பகுதியில் எல்லை பதற்றம் என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய […]

India Pakistan Tensions 4 Min Read
India Pakistan Tensions

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில அரசுகள் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளன. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தானில் எல்லையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்முவில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, […]

#Attack 4 Min Read
schools shut

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 3 மாநிலங்களில் உச்ச கட்ட பரபரப்பு நிலவும் சூழலில், டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை என பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இரண்டு JF17 விமானங்களும், ஒரு F16 விமானமும் அடங்கும். இதில் குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் F16 […]

DroneAttack 3 Min Read

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இரண்டு JF17 விமானங்களும், ஒரு F16 விமானமும் அடங்கும். இந்நிலையில், தங்களின் இரண்டு JF17 வகை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில எல்லையோரம், டாங்கி படையை பாகிஸ்தான் குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அமைந்துள்ள நிலைகள் மீது பாகிஸ்தான் […]

DroneAttack 3 Min Read
Jammu and Kashmir

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான சத்வாரி கண்டோன்மென்ட்டில் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. சர்வதேச எல்லைக்கு அருகில் பல இடங்களில் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைதொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தைச் சுற்றி அவசரகால சைரன்கள் ஒலிக்க தொடங்கியது. தாக்குதல்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மொபைல் சேவைகளும் செயல்படவில்லை. ஆனால், இந்தியாவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை, இந்தியாவின் […]

#Attack 4 Min Read
India Pakistan Tensions