இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 738 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,05,02,362 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,05,02,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 738 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,01,050 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 57,477 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,96,05,779 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,95,533 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 34,46,11,291 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.