#Breaking: டெல்லி போராட்டத்தில் வன்முறை ! போலீசார் துப்பாக்கிச்சூடு

Default Image

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில்  நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக  டெல்லியில்  நடைபெற்ற போராட்டத்தில் 2  முறை துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.எனவே டெல்லியில் உள்ள மாஜ்பூர் மற்றும் ஜாப்ராபாத் பகுதிகளில் நேற்று மாலை டியுரிமை திருத்த  சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் நடைபெற்றது.

இந்நிலையில் இன்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.குடியுரிமை திருத்த  சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் முதலில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.பின்  துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  வரும் டெல்லியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  ஆக்ராவில் தாஜ்மகாலுக்கு சென்று விட்டு டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்