கொரோனா தொற்றால் உயிரிழந்தவரிடம் இருந்து பணத்தை திருடும் மருத்துவமனை ஊழியர்கள்...!

Hospital staff stealing money from a corona infection victim.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரிடம் இருந்து பணத்தை திருடும் மருத்துவமனை ஊழியர்கள்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வருகிறது இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் துலேயில் உள்ள ஸ்ரீ கணேசா மல்டி ஸ்பெஷாலிட்டி என்ற மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அந்த மருத்துவமனையில் வேலை பார்த்து நான்கு இளைஞர்கள் இளைஞர்களில் ஒருவர் அந்த சிறிய பெட்டியின் உள்ளே நோயாளி ஸ்ட்ரெச்சரில் படுத்து கிடந்தனர். அதில் ஒருவர் பெட்டியின் கதவை மூடிவிட்டார். மற்றவர்  நோயாளியின் பணப்பையை வெளியே இழுத்துள்ளார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.