பீகார் :முதலமைச்சர் நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பீகாரில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நிதீஷ் குமார் விரைவில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அவரது இல்லத்திற்கு முன்பு ஜனதா தள யுனைடெட் (JDU) கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, “நிதீஷ்தான் வேண்டும்” என்று கோஷமிட்டனர்.
அவர்கள் நிதீஷ் முதலமைச்சராகவே தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர். இது கட்சியின் உள் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.நிதீஷ் குமார் ராஜினாமா செய்தால், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய கூட்டணி ஏற்பாட்டின்படி, பாஜகவுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இது JDU உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நிதீஷ் குமார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவர் முதலமைச்சர் பதவியை உறுதியாக ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவரது அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று பார்க்கப்படுகிறது. அவரது முடிவு பீகார் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரிகிறது.
மேலும், நிதீஷ் குமார் முதலமைச்சர் பதவியை விட்டு விலகுவது பீகார் அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையும். பாஜகவுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, JDU தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் அன்புமணி போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அவரது வெற்றி கூட்டணியின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
