எதிர்க்கட்சிகள் சுயலாபத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றனர் என மாயாவதி குற்றசாட்டு.
உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் நாடும் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாயாவதி, தலித் பிரிவு சகோதர சகோதரிகள் மீது ஏதேனும் துன்புறுத்தல் ஏற்பட்டால்,எதிர்க் கட்சிகள், அரசியல் நாடகம் நடத்தி, பயனடைவதாக குற்றம்சாட்டியுள்ளார்.