வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கலாம்.!

The Ministry of External Affairs has approved that expatriate Indians may take steps to vote online in the forthcoming Assembly elections.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் (ஆன்லைன்) வாக்களிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்ய மத்திய சட்டத்துறை, வெளியுறவுத்துறைக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பபட்டது. தேர்தல் ஆணையத்தின் திட்டத்தை செயல்படுத்தலாம் என வெளியுறவுத்துறை பதில் கடிதம் அனுப்பியுள்ளது. தேர்தல் தொடர்பான பிற அமைப்புகளுடன், ஆணையம் இந்த விஷயத்தை இறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.