ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களிலிருந்து நாம் நாட்டை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்பது வீடுகள்தோறும் எதிரொலிக்க தொடங்கி விட்டது.நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு தொழில் முனைவோர் முன்வர வேண்டும். அந்நிய பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பிலே […]
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியான ‘கோவிஷீல்ட்’ இந்தியாவில் முதலில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது. சீரம் நிறுவனத்திற்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவு செய்வதற்கு முன்னர், ஜனவரி மாதத்திற்குள் தடுப்பூசி வெளிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்று நம்புகிறது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து மருந்து சீராக்கி ஒப்புதல் அளித்தவுடன், கொரோனா தடுப்பூசி குறித்த நிபுணர் குழு அதன் கூட்டத்தை நடத்தி வெளிநாட்டிலும் இந்தியாவிலும் நடத்தப்படும் […]
இந்தியாவில் ஜனவரி மாதம் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்படும், இதில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும், ஒரு தேசிய விடுமுறையும் அடங்கும். இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) படி, இந்த விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம். அந்த மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை கருத்தில் கொண்டு விடுமுறை கொடுக்கப்படுகிறது. கடைசி நிமிடத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான பணிகளை அதற்கேற்ப திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நாட்களில் வங்கிகள் […]
நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து பிற்பகலில் முடிவு எடுக்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவுமில்லை எனவும், ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகவே ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில் […]
அகமதாபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.67.07 கோடியும், டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் ரூ .64.78 கோடி வங்கி மோசடி செய்தது தொடர்பாக இரண்டு தனித்தனியான வழக்குகளை மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் சில்வாசா உள்ளிட்ட இடங்களில் உள்ள கிருஷ்ணா நிட்வேர் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம்,அதன் இயக்குநர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சோதனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.67.07 கோடி மோசடி […]
ஒடிசாவில் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் 64 வயதுடைய ஓய்வு பெற்ற வங்கியாளர் நீட் தேர்வெழுதி மருத்துவ மாணவராக முதல் ஆண்டு சேர்ந்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெய் கிஷோர் பிரதான் என்பவர் மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டு தனது 64வது வயதில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை, ஜெய் கிஷோருக்கு 64 வயதாகிறது. இவர் எஸ்பிஐ வங்கியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி. இவர் ஊனமுற்றோர் இட ஒதுக்கீடு […]
தனது வீட்டை தீ வைத்து கொளுத்த வந்த மர்ம நபர்களை தடுக்க முயன்ற ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராச்சகொண்டா எனும் இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் தான் பிக்ஷபதி ராவ். இவர் 40% தீக்காயங்களுடன் தற்போது மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது வீட்டை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்த வந்ததாகவும், அதனை தடுக்க முயன்று அவர் கதவைத் திறந்ததும் வெளியே இருந்த ஒருவர் எரிபொருள் ஒன்றை […]
தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த தலைவர்கள் அடுத்த மூன்று நான்கு மாதங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார்கள் என்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். முன்னதாக சட்டமன்றத் தேர்தலின் போது, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்கள் பாஜகவில் இணைந்தார்கள். கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் அவர்களின் திட்டங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பாஜகவுக்குச் சென்றனர்.இருப்பினும், இப்போது இந்த தலைவர்கள் விரக்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவர்கள் தங்கள் பகுதிக்கு எந்த திட்டங்களையும் […]
நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதி குறித்து மருத்துவமனை இன்று முடிவு செய்யவுள்ளது. ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவுமில்லை எனவும், ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எளினும் ரஜினியை முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். […]
நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை டெல்லியில் கொடியசதைத்து தொடங்கி வைக்கவுள்ளார். புதிய வகையான இந்தத் தொழில்நுட்பங்களின் வாயிலாகப் புதியதொரு பயண அனுபவத்தையும், மேம்படுத்தப்பட்ட இணைப்பையும் பெறலாம். முழுவதும் தானியங்கி முறையில் இயங்குவதால் ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்களில் மனிதத் தவறுகள் களையப்படுகின்றன.மெஜந்தா மார்க்கத்தில் இந்தச் சேவை துவக்கப்பட்ட பிறகு டெல்லி மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் 2021-ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நாளை […]
பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள்சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்ற, இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வருகின்ற 31-ம் தேதி கேரள சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த 23-ஆம் தேதி நடத்த இருந்த வேளாண் சிறப்பு கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், தற்போது கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆரிஃப் முகமது […]
வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 29 ஆம் தேதி மத்திய அரசுடன் விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளனர். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 31 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு 5 […]
பிரிட்டனில் இருந்து கேரளா வந்தடைந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது புதிய வகையான கொரோனா வைரஸா? என கண்டறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக […]
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்து டெல்லி தேவாலயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளனர். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா, உலகமெங்கும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் இணைந்து டெல்லி தேவாலயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு ஒன்று சிங்கு எல்லைக்கு வந்து விவசயிகளுடன் இணைந்து, பண்டிகை கொண்டாடியுள்ளனர். […]
ஜம்மு-காஷ்மீரில் டி.ஆர்.எஃப் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை அம்மாநில போலீசார் கைது செய்தனர். காஷ்மீரில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் நடமாடி வருவதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் மற்றும் சிறப்பு பிரிவினர் சோதனை சாவடி அமைத்து சோதனை நடத்தினார்கள். அப்பொழுது ஸ்ரீநகர் நோக்கி சென்ற ஒரு காரை பிடித்து சோதனை செய்த போலீசார், அதில் இருக்கும் பொருட்களை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த காரில் 16 துப்பாக்கிகள் இருந்ததை கண்டு அதிர்ந்த போலீசார், […]
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள குடிமை அமைப்பு, முன்னுரிமை குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் கூற்றுப்படி, வீட்டிலிருந்து வீடு கணக்கெடுப்பு அல்லது நகர்ப்புற சுகாதார மையங்களில் (யு.எச்.சி) சுகாதார ஊழியர்களுடன் தங்களை பதிவு செய்யாத நகரத்தின் முன்னுரிமை குழுக்களின் குடிமக்கள் தங்களை www.ahmedabadcity.gov இல் பதிவு செய்யலாம். சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் ஆகியோருக்கான பதிவு செயல்முறையை […]
கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “களரிப்பயட்டு – ரத்தத்தை துள்ளச்செய்யும் மண்சார்ந்த விளையாட்டு.இதற்கு உலகில் சரியான இடம் கிடைக்கவேண்டும். இவ்விளையாட்டிற்கு அதிக உடல்திறனும் மன ஒழுக்கமும் தேவை.இதை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்த்திருப்பது,கிராம மக்கள் பங்கேற்க அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுக்கும். வாழ்த்துகள்” என […]
இங்கிலாந்திலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்திற்கு திரும்பிய ஒரு பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 25 க்குப் பிறகு இங்கிலாந்திலிருந்து அவுரங்காபாத் மாவட்டத்திற்கு வந்த 44 நபர்களில் இந்தப் பெண்ணும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த இங்கிலாந்து திரும்பியவர்களில் 11 பேர் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அறிகுறியற்றவர் என்று அவுரங்காபாத் மாநகராட்சியின் (ஏ.எம்.சி) சுகாதார அதிகாரி டாக்டர் நீதா படல்கர் தெரிவித்தார். அவரது மாதிரி புனேவை தளமாகக் கொண்ட […]
ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த மருத்துவ காப்பீடு திட்டமானது அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் வழங்குவதோடு,நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது என்று மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட […]
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்த நாளையொட்டி நேற்று டெல்லியில் உள்ள ஒரு பூங்கா மற்றும் பொது வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று கிறிஸ்மஸ் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டாலும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு வந்தது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அவர்கள் அவருக்கு அஞ்சலி […]