ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பாஞ்ச் எனும் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வசித்து வருகிறார் சித்தரஞ்சன் முண்டா. இவரது மனைவி துளசி முண்டா. இவர் நிறைமாத கர்ப்பிணியான துளசிக்கு பிரசவ வலி வரவே, உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
unknown node0பின்னர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால், மேல் சிகிச்சைக்காக பார்ப்பிடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த சமயம் அரசு ஆம்புலன்ஸ் கிடைக்காகத்தால், தனியார்ஆம்புலன்ஸ் சேவையை நாடியுள்ளனர்.ஆனால் அந்த தனியார் ஆம்புலன்ஸ் பார்பிடா செல்லும் வழியிலேயே பெட்ரோல் இல்லாமல், நின்றுவிட்டது. இதனால் வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால், வேறு ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் துளசி முண்டா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.